இடுகைகள்

The Radium Girls

படம்
The Radom Girls - ஒளிர்ந்த ரேடியத்தின் பின்னால் மறைந்திருந்த இருள் சில புத்தகங்களை நாம் வாசித்து முடிக்கும் போது அந்த புத்தகம் பல உணர்வுகளை நம்மை அறியாமல் நம்மிடம் கடத்தி இருக்கும். Kate Moore எழுதிய The Radium Girls அப்படிப்பட்ட ஒரு புத்தகம். நாம் வாழும் உலகம் எவ்வாறு உருவானது, சில உரிமைகள் எத்தனை வலிகளுக்குப் பிறகு கிடைத்தன, ஒரு சாதாரண மனிதனின் குரல் எவ்வாறு வரலாற்றையே மாற்றக்கூடும் என்பதை அவை நமக்குள் கேள்விகளாக விதைத்துச் செல்கின்றன. இது வெறும் ரேடியத்தைப் பற்றிய புத்தகம் அல்ல. இது அறிவியலின் வரலாறு மட்டுமல்ல. இது தொழிற்சாலைகளின் வரலாறும் அல்ல. தங்கள் உழைப்பால் உலகை ஒளிரச் செய்த பெண்கள், அதே ஒளியால் தங்கள் வாழ்க்கையை இழக்க நேர்ந்த ஒரு துயரமான வரலாறு. 1920களின் அமெரிக்காவில் ரேடியம் அப்போது ஒரு அதிசயப் பொருளாகக் கருதப்பட்டது. அதன் ஒளிரும் தன்மை மக்களை வியப்பில் ஆழ்த்தியது.  கடிகாரங்களின் எண்களும் ஊசிகளும் இருளிலும் ஒளிர வேண்டும் என்பதற்காக ரேடியம் கலந்த பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பெயிண்டை மிக நுணுக்கமாகப் பூசுவதற்காக தொழிற்சாலைகளில் ஏராளமான இளம் பெண்கள் வேலைக்கு அமர...

உன் மனதை வென்று விடு (Master Your Mind)

படம்
இது வெறும் தன்னம்பிக்கை புத்தகம் அல்ல. நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக சொல்லி, அதை நமக்கு சாதகமாக மாற்றும் வழியை சொல்லும் புத்தகம். நாம் எல்லோரும் நினைக்கிறோம் வேகமாக ஓடினால் தான் ஜெயிக்கலாம் என்று. ஆனால் இந்த புத்தகம் சொல்வதோ வேறு: மெதுவாக நடந்தால் தான், சீக்கிரம் இலக்கை அடைய முடியும். மனசு களைப்பாக இருக்கும்போது மேலும் மேலும் வேலை கொடுத்தால், மூளை முடங்கித்தான் போகுமே தவிர சுறுசுறுப்போடு இயங்காது.  அதை சுத்தம் செய்து தான், மீண்டும் ஓட வைக்க வேண்டும். இந்த புத்தகத்தின் கூறப்பட்டுள்ள  3 முக்கிய கருத்துக்களை காண்போம் 1⃣ உன் உள்ளீட்டை கட்டுப்படுத்து: நம் மூளை ஒரு கணினி மாதிரி. நீ என்ன கொடுக்கிறாயோ அதையே திருப்பித் தரும்.  நாள் முழுக்க கெட்ட செய்திகள், வம்பு பேச்சுக்கள், தேவையில்லாத ரீல்ஸ் பார்த்தால் நம் மனதில் குப்பை தான் சேரும்.  நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள், நல்ல எண்ணங்களை மட்டும் நம் மூளைக்கு உணவாக கொடுக்க வேண்டும். 2⃣ தலைக்குள் இருக்கும் குரல்களை வெல்: நம் மனதிற்குள் இரண்டு குரல் பேசும். ஒன்று "உன்னால் முடியும்" என்றும். இன்னொன்று "உன்னா...

📖 வேங்கையின் மைந்தன் - அகிலன்

படம்
📖 வேங்கையின் மைந்தன் - அகிலன் "வேங்கையின் மைந்தன்' தமிழ் வரலாற்றுப் புதினங்களில் ஒரு சிகரம். அகிலன் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுத்தந்த  படைப்பு. ​இந்த நாவல் சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனை (இராஜராஜ சோழனின் மகன்) கதையின் நாயகனாகக் கொண்டு எழுதப்பட்டது ​தஞ்சையில் இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவோடு கதை தொடங்குகிறது. தந்தை இராஜராஜனின் மறைவுக்குப் பிறகு, இராஜேந்திரன் அரியணை ஏறுகிறான். ​ இக்கதை கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்று, அதன் நினைவாக 'கங்கை கொண்ட சோழபுரம்' என்ற புதிய தலைநகரையும், பிரம்மாண்டமான ஏரியையும் (சோழகங்கம்) உருவாக்குவதை விவரிக்கிறது. மேலும் ​கடல் கடந்து கடாரம் (இன்றைய மலேசியா), ஸ்ரீவிஜயம் (இந்தோனேசியா) போன்ற நாடுகளைக் கடற்படை மூலம் வென்றெடுத்த வீர வரலாறு பேசப்படுகிறது. இளவரசன் இராஜேந்திரனுக்கும், ஈழ இளவரசி அருமொழிக்கும் இடையிலான மென்மையான காதல் மற்றும் போர் முனையில் அவன் காட்டும் வீரம் ஆகியவற்றையும் அகிலன் அழகாகப் பின்னியிருப்பார். ​வந்தியத்தேவன்: வயதான நிலையில், ஒரு முதிர்ந்த ஆலோசகராக இந்த ந...